சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காத பல நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இன்றைய உலகில் திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை நிகழ்ச்சிகளும் சீரியல்களும் ஓலிபரப்பாகி வருவது தான். திரைப்படங்களில் இருக்கும் நகைச்சுவை, பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்து அம்சங்களும் தொலைக்காட்சி தொடர்களிலும் இடம்பெற்று வருகின்றன.
நடிகை ஸ்ரித்திகா, வயது 35, மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகமாகும் ஆசையுடன் தமிழகம் வந்தார். முஹூர்த்தம் என்ற சின்னத்திரை தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரித்திகா, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான “மஹேஷ், சரன்யா மற்றும் பலர்” என்ற படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
இதன் பின்னர் “வெண்ணிலா கபடி குழு” படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரித்திகா, கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான் “மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி” படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரித்திகா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான “நாதஸ்வரம்” என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து “குல தெய்வம்”, “கல்யாண பரிசு 2”, “அழகு” உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரித்திகா தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பாகி வரும் “மகராசி” என்ற தொடரில் “பாரதி” என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா.
தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னனி நாயகியாக கலக்கி வந்த நடிகை ஸ்ரித்திகா தற்போது முதன் முறையாக தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் அறிமுகமாகி உள்ளார். ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஆ ஒகட்டி அடக்கு” என்ற தொலைக்காட்சி தொடரில் “கோமலா” என்ற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா.
கடந்த 2019ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரித்திகா தமிழ் தொலைக்காட்சி உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் முன்னனி நாயகியாக பிசியான நடிகையாக வலம் வருகிறார். பார்க்க கொளு கொளுவென மிக அழகிய ஆண்ட்டி போல இருக்கும் நடிகை ஸ்ரித்திகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடதக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…