பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5. தொடர்ந்து மூன்று வாரங்களை கடந்துவிட்ட நிலையில் முதல் வாரத்தில் எந்த நாமினேஷனும் இல்லலை. கடந்த வாரம் தாமரைச்செல்வி பாவனியைத் தவிர மற்ற அனைவரும் நாமினேஷனனில் இடம் பெற்றார்கள ஓட்டெடுப்பின் படி நாடியாசாங் அவர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இப்போது இந்த வாரம் இரண்டாம் நாமினேசன் நடைபெற்றது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தது. பிரியங்காவின் பல செயலல்கள் மற்றவரர்களை ஆத்திரப் படுத்தும் வகையில் இருந்தது. போட்டியாளர்கள் 16 பேர்களில் அக்ஷராவை ஆரம்பத்திலிருந்தே பிரியங்கா செய்து வருவதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக அக்ஷராவுக்கும், பிரியங்காவிற்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. அதில் ஒரு சமயம் பிரியங்கா அக்ஷராவிடம் நான் சத்தமாக பேசுவதினால் வெளியில் நீ நல்லவளாகவும் நான் கெட்டவளாகவும் தெரிய வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் அக்ஷராவிடம் எதை பற்றி பேச வேண்டுமானாலும் நேரடியாகபேசசு. ஏன் ரகசியமாக காகிதத்தில் எழுதி அதை பாத்ரூமில் போட்ர. நீ காகிதத்தில் என்ன எழுதற என்பது எங்களுக்கோ, பிக்பாஸுக்கோ பார்க்கும் மக்களளுக்கோ தெரியாது. ஆனால் நீ செய்கின்ற இந்த செயல் நாங்கள் என்னவோ உன்னை கார்னர் செய்வது போல பார்க்கும் மக்களுக்கு தோன்றும். இவ்வாறு செய்வது மிகப்பெரிய தவறு என்றும், மிகவும் அசிங்கமான விஷயம் என்றும் பிரியங்கா கூறினார்.
ஆனால் இதே பிரியங்கா தான் சில நாட்களுக்கு முன்னால் அக்ஷராவை பற்றி பேசும் பொழுது நிரூப்பிடம் அவரது கையில் ஏதோ எழுதிக் காண்பித்தார். இவர் இப்படி செய்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து தவறை தட்டிக் கேட்பதற்கு முன்னர் நீ சரியா என்று பார்க்க வேண்டும் என பிரியங்காவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் கடந்த வாரம் பிரியங்காவின் தம்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அட ஒரே நாளில் இவ்வளவு நெருப்புகள், கோபங்கள் தேவையா? இது வெறும் ஒரு கேம்ஷோ தான். நிச்சயம் பிரியங்கா உங்களை ஏமாற்ற மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவளுக்கென்று உண்மையான ரசிகர்கள் இருப்பது பெருமைக்குரிய விஷயம்தான். நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து என்ஜாய் செய்யுங்கள். அப்படி இல்லை என்றாலும் வெளியில் வந்தும் பிரியங்கா உங்களை அளவுக்கதிகமாக தான் மகிழ்ச்சி அடையச் செய்வார் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…