பிக் பாஸ்

நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர் நமிதா மாரிமுத்து. அவர் அனைத்து போட்டியாளர்களுடன் கனிவாக பழகி நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் டாஸ்கில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி கூறியிருந்தார் நமிதா. அதில் அவர் பட்ட துன்பங்களையும் இந்த வாழ்க்கையை அவர் வாழ்வதற்காக எதிர்கொண்ட சவால்களையும் பற்றி கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தினால் நமீதா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.

namitha

தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கு இவ்வளவு போராட்டங்களை மேற்கொண்டு அதன் பிறகு அதில் வெற்றியும் கண்ட நாமிதா பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவர் கலந்துகொண்ட போட்டிகளில் 90% அவர் வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார். இதுவரை வெற்றிக்கான மெடல்களை 20 கும் மேல் வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் நமிதா.

அதன்பிறகு நமிதா ஒரு முக்கியமான கன்டஸ்டன்ட்டாக அனைவராலும் பார்க்கப்பட்டார். இறுதியில் நமிதா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என்றும் பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து ரகளை செய்ததாகவும், பிக் பாஸ் குழு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் சமாதானம் ஆகாததால் ரெட்கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றியதாகவும் பல வதந்திகள் வெளியாகின.

namitha

இப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது நமிதா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களையும் தனிமை படுத்துவதாக தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா? மற்ற போட்டியாளர்களுக்கும் தோற்றுக் ஏற்பட்டிருக்குமா? போன்ற கேள்விகளை பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

namitha

மேலும் பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னர் அனைத்து போட்டியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஒரு சூழ்நிலையில் நமிதாவிற்கு கொரொனா ஏற்பட்டுள்ளது உண்மையாகும் பட்சத்தில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா அவர்கள் தொடர்வாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago