பிரபல இசை சேனலின் தொகுப்பாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வாரா

2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படையாக யாக காட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தை தொடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்களுக்கு 19 பங்கேற்பாளர்களுடன் நடத்தப்படுகிறது.

bigg boss

முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவின் உண்மை தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் சில தனிப்பட்ட காரணத்தின் விளைவாக ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே தானாக விலகிக்கொண்டார். இந்தக் காரணத்தின் காரணமாகவே ஆரவ் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசை பாடலாசிரியர் சினேகன் அவர்கள் பெற்றிருந்தார்.

முதல் சீசன் எதிர்பாராத வெற்றியை தொட்ட நிலையில், இரண்டாவது சீசனும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதில் தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் அதுவும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாவது சீனில் வனிதா போன்றோர் பங்குபெற்றார்கள். ஆனால் முந்தைய சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் ஆரம்பத்தில் இல்லை என்றாலும் போக போக சூடு பிடித்தது. கவின் லாஸ்லியா காதால் தான் அந்த சீசனின் பேசுபொருளாக இருந்தது.

bb final

நான்காவது சீசனை பொறுத்தவரை பங்கேற்பாளர்கள் மிகவும் பரிச்சயமானவர்களாவும், மக்களுக்கு மிகவும் பிடித்தவர்களாகவும் இருந்தனர். ஆகவே நான்காவது சீசன் முதல் சீசன் அளவிற்கு நல்ல டிஆர்பியையும் வரவேற்பையும் சானலுக்கு பெற்றுக்கொடுத்தது.

போட்டியாளர்கள் மத்தியில் ஆரி ஒதுக்கப்பட்டவராக மற்றவர்களின் கேளி, கிண்டலுக்கு ஆளானாலும், அவரின் உண்மைத் தன்மையும், வெளிப்படையான பேச்சும், தைரியமான நடத்தையும் மக்கள் அனைவருக்கும் பிடித்து போக ஆரி நான்காவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாவும் தனது உண்மையான குணத்துடன் இருந்ததினாலேயே அவர் இரண்டாவது பரிசை வென்றார்.

abishek

இப்பொழுது ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பங்கேற்பாளர்களை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்காக 14 நாட்கள் தனி அறையில் இருக்க வைத்துள்ளனர். மேலும் பங்கேற்பாளர்களின் தேர்வில் மிகவும் கவனம் செலுத்தும் விஜய் டிவி, இந்த சீசனில் மிகவும் பரிட்ச்சயமான முகங்களேயே பங்கேற்பாளார்களாக தேர்தெடுத்திருப்பதாக விஜய் டிவி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்பதற்காக இன்று மூன்று பிரபலங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல இசை சேனலில் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றி வரும் அபிஷேக் ராஜாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அபிஷேக் ராஜா தொடக்க காலத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார். இவரின் கவர்ச்சிகரமான பேச்சால் தனது அழகிய வர்ணனையுடன் தனது பணியை செய்து மக்கள் மனதில் அவருக்கென தனி இடத்தை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு கிடைத்திருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவருக்கு மேலுமொரு வெற்றி வாய்ப்பாக அமையும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago