சென்னையில் புடவையை கட்டிக்கொண்டு இந்த ஆட்டம் ஆடுகிறாரே. எப்படித்தான் இவரால் இப்படி இறங்கி ஆட முடிகிறதோ என்று பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் மிரட்டல் ஆட்டம் போட்டிருக்கிறார் ஆலியா மானசா.
விஜய் டிவியின் கியூட் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா. அவர் நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் பிரபலமாகி இப்போது இரண்டாவது சீரியலிலும் பட்டையை கிளப்பி வருகின்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ஆலியா மானசா. அந்த தொடரில் செண்பா எனும் கதாபாத்திரத்தில் அப்பாவி தனமாக தனது இயல்பான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார். எனவே இன்று வரையிலும் ரசிகர்களின் மனதில் ராணியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆலியா மானசா.
ஆலியா படவையுடன் நடுரோட்டில் குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோ இப்போது வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி ஒரு வீடியோவை திருமணத்திற்கு பிறகு ஆலியா வெளியிடுவார் என எதிர்பார்க்காத ரசிகர்கள் மிகவும் ஷாக்காகி இருக்கின்றனர். திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும் நடிக்க வருவதென்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. ஆனால் சீரியலில் அவருக்கு கொழுந்தனாக நடிப்பவருடன் சேர்ந்து ஆலியா போட்ட குத்தாட்டம் தான் ரசிகர்களை மிகவும் கலங்க வைத்துள்ளது.
ரசிகர்கள் தான் புலம்பித் தவிக்கின்றார்கள் என்றால் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா? இவருடைய இந்த வீடியோவை பார்த்து ஆலியா மானசாவை பல விதத்தில் கலாய்த்து வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மீண்டும் ரசிகர்களின் மத்தியில் சந்தியாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் சீசனில் செம்பா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தற்போது சந்தியாவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முதல் சீரியலில் கிடைத்த வரவேற்பு இந்த சீரியலிலும் கிடைத்திருந்தாலும் திருமணம் முடிந்த பிறகும் ஒரு குழந்தை பிறந்த பிறகும் மீண்டும் எப்படி இவரால் இந்த அளவிற்கு நடிக்க முடிகிறதென்று பலரும் யோசித்து வருகின்றனர்.
பலரும் இப்படி யோசிப்பதற்கு காரணம் குழந்தை பிறந்ததும் ஆலியாவின் உடல் புசுபுசுவென மாறிவிட்டது. ஆனால் கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு கட்டுப்பாட்டுடன் உடல் எடையை குறைத்து, தனது உடலை ஸ்லிம்மாக அழகாக மாற்றிக்கொண்டு தன்னுடைய ஜாலியான ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
இவருடன் முதல் சீரியலில் நடித்த சஞ்சீவியையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆலியா. சீரியலில் நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் திருமணம் செய்து கொண்ட பிறகும் அதே பழைய காதலனுடன் இருப்பது தான் பெரியது. இவர்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் தங்களுக்கு இருக்கக் கூடிய எந்த ஒரு வேலையையும் சுலபமாக அவர்களால் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும்.அதனால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வராது என்று தங்களுடைய காதலை அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…