பொழுதுபோக்கு

இதற்கு தான் இரண்டாவது திருமணத்தை வேண்டாம் என்று சொன்னீர்களா? டிக் டாக் சுமதியின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்

தமிழ்நாட்டில் டிக் டாக்கை தடை செய்வதற்கு முன்னர் சாதாரண மக்களும் தங்களின் தனித்திறமையை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்தனர். இதில் ஒரு சில காதல் ஜோடிகளும் தங்கள் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்கள். அவ்வாறு மிகவும் பிரபலமான காதல் ஜோடி தான் உதயா மற்றும் சுமதி. இவர்களின் வீடியோவிற்காகவே தவமாய் தவமிருக்கும் ரசிகர் கூட்டமும் இருந்தனர். இவர்கள் இருவருக்குமே தனித்தனியாகவும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.

udhaya

இவர்கள் இவ்வாறு ஃபேமஸாக இருந்த சமயத்தில்தான் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இருப்பினும் இவர்கள் தங்கள் வீடியோக்களை யூடியூப், மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். அங்கும் இவர்களது ரசிகர்கள் இவர்களைத் தொடர்ந்து பாலோ செய்து வந்தனர். இவ்வாறு இவர்களுக்கு யூடியூபில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோவர்களும் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் பாலோவர்களும் இருந்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உதயா ஒரு விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உதயா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். உதயாவின் மருத்துவ செலவிற்காக அதிகமாக பணம் செலவாகும் என்று மருத்துவர் கூறியதால் சுமதி தனது ரசிகர்களிடம் உதவி கரம் ஏந்தினார். இவருக்காக பல ரசிகர்களும் உதவி செய்ய முன் வந்தனர்.

sumathi

இதனைத் தொடர்ந்து பல ரசிகர்களும் தங்களால் முயன்ற தொகைகளை உதவியாற்காக கொடுத்து வந்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் உதயா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உதயாவின் தாயுடன் வசித்து வந்த சுமதி அவர்களுக்கு அவரின் அத்தை மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

சுமதியின் பெற்றோர்களும் இவரை சரிவர கவனித்து கொள்ளாததால் தனது அத்தையின் முடிவிற்காக முதலில் சற்றுத் தயங்கிய சுமதி தனது குழந்தையின் எதிர்காலம் குறித்தும், தனக்கும் ஒரு வாழ்க்கைத் துணை தேவை என்பதை உணர்ந்தும் தனது அத்தையின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தார்.

எனவே அன்பு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதற்காக ரசிகர்கள் பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் தெரிவித்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் சுமதி. ஆனால் சிறிது நாட்களிலேயே உதயாவை என்னால் மறக்க முடியவில்லை அதனால் அன்புவுடன் சேர்ந்து வாழ முடியாது எனவே அவரை நான் பிரிகிறேன் என்று கூறி மறுபடியும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார் சமதி.

இந்த நிலைமையில் தற்போது சுமதி தனது நீண்ட நாள் நண்பரான ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை அறிந்த ரசிகர்கள் இதற்குதான் 2வது திருமணம் செய்த அன்புவை விட்டுப் பிரிந்து சென்றீர்களா? என சுமதியை மிகவும் வன்மையாகக் கடிந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சுமதி 3வது திருமணம் செய்யப் போகிறாரா? இல்லையா? என்பது இனிதான் தெரிய வரும்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago