Homeபொழுதுபோக்குஇதற்கு தான் இரண்டாவது திருமணத்தை வேண்டாம் என்று சொன்னீர்களா? டிக் டாக் சுமதியின் மீது உச்சக்கட்ட...

இதற்கு தான் இரண்டாவது திருமணத்தை வேண்டாம் என்று சொன்னீர்களா? டிக் டாக் சுமதியின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்

தமிழ்நாட்டில் டிக் டாக்கை தடை செய்வதற்கு முன்னர் சாதாரண மக்களும் தங்களின் தனித்திறமையை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்தனர். இதில் ஒரு சில காதல் ஜோடிகளும் தங்கள் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்கள். அவ்வாறு மிகவும் பிரபலமான காதல் ஜோடி தான் உதயா மற்றும் சுமதி. இவர்களின் வீடியோவிற்காகவே தவமாய் தவமிருக்கும் ரசிகர் கூட்டமும் இருந்தனர். இவர்கள் இருவருக்குமே தனித்தனியாகவும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.

udhaya
udhaya

இவர்கள் இவ்வாறு ஃபேமஸாக இருந்த சமயத்தில்தான் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இருப்பினும் இவர்கள் தங்கள் வீடியோக்களை யூடியூப், மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். அங்கும் இவர்களது ரசிகர்கள் இவர்களைத் தொடர்ந்து பாலோ செய்து வந்தனர். இவ்வாறு இவர்களுக்கு யூடியூபில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோவர்களும் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் பாலோவர்களும் இருந்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உதயா ஒரு விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உதயா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். உதயாவின் மருத்துவ செலவிற்காக அதிகமாக பணம் செலவாகும் என்று மருத்துவர் கூறியதால் சுமதி தனது ரசிகர்களிடம் உதவி கரம் ஏந்தினார். இவருக்காக பல ரசிகர்களும் உதவி செய்ய முன் வந்தனர்.

sumathi
sumathi

இதனைத் தொடர்ந்து பல ரசிகர்களும் தங்களால் முயன்ற தொகைகளை உதவியாற்காக கொடுத்து வந்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் உதயா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உதயாவின் தாயுடன் வசித்து வந்த சுமதி அவர்களுக்கு அவரின் அத்தை மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

சுமதியின் பெற்றோர்களும் இவரை சரிவர கவனித்து கொள்ளாததால் தனது அத்தையின் முடிவிற்காக முதலில் சற்றுத் தயங்கிய சுமதி தனது குழந்தையின் எதிர்காலம் குறித்தும், தனக்கும் ஒரு வாழ்க்கைத் துணை தேவை என்பதை உணர்ந்தும் தனது அத்தையின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தார்.

sumathi-family

எனவே அன்பு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதற்காக ரசிகர்கள் பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் தெரிவித்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் சுமதி. ஆனால் சிறிது நாட்களிலேயே உதயாவை என்னால் மறக்க முடியவில்லை அதனால் அன்புவுடன் சேர்ந்து வாழ முடியாது எனவே அவரை நான் பிரிகிறேன் என்று கூறி மறுபடியும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார் சமதி.

இந்த நிலைமையில் தற்போது சுமதி தனது நீண்ட நாள் நண்பரான ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை அறிந்த ரசிகர்கள் இதற்குதான் 2வது திருமணம் செய்த அன்புவை விட்டுப் பிரிந்து சென்றீர்களா? என சுமதியை மிகவும் வன்மையாகக் கடிந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சுமதி 3வது திருமணம் செய்யப் போகிறாரா? இல்லையா? என்பது இனிதான் தெரிய வரும்.

சற்று முன்