பிக் பாஸ்

ரசிகர்களுக்கு ராஜு கொடுத்த ஷாக். என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 இல்பலர் கலந்துகொண்டனர். அதில் ப்ரியங்கா, அமீர், பாவணி, ராஜு ஆகியோர் இறுதி நிலையில் இருந்தனர். பின்பு பாவணி மற்றும் அமீரும் வெளியேறினர். இறுதியில் பிரியங்கா மற்றும் ராஜா ஆகியோர் வெற்றியின் விளிம்பில் இருந்தனர். அதில், ராஜு வெற்றிக்கனியை பெற்றார்.

பிக்பாஸ் ராஜுவை பற்றி
அவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக்கொண்டிருக்கும்போதே பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ராஜுவின் கதாபாத்திரம் சவுதி அரேபியாவில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறை தண்டனை அடைவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் 5-இல் நுழைந்தார் ராஜு.

பிக் பாஸ் இன் வெற்றிக்கு பிறகு
பெரும் புயலுக்குப் பின் அமைதி என்பது போல் வெற்றிக்குப் பிறகு சில நாட்கள் பிக்பாஸ் ராஜு அமைதியாகவே இருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ராஜு மீடியா சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராஜு அளித்த பதில்
அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி எப்போதும் சீரியலில் நடிக்க போகிறீர்கள். அதற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார். இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையில் தனக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதனால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தன் திரை வாழ்க்கை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி இருக்கிறது என்று கூறி நெகிழ்துள்ளார்.

இதனால், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் ராஜு நடிக்க மாட்டார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது இனி அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago