சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.
‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார்.
இந்த சீரியல் ஹிட் அடிபதற்கு வேறொரு காரணம் வில்லி கதாபாத்திரமான வெண்பாவாக ஃபரினா நடிப்பும் கூட. இவரது வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஆண் குழந்தை பெற்ற இவர், ஓய்வுக்கு பின் தற்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஃபரினா வேறொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பாரதி கண்ணமா சீரியலில் இருந்து வெண்பா முற்றிலும் விடுவிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் வெண்பாவின் வில்லத்தனம் குறித்து தற்போது மெல்ல மெல்ல தெரிந்து கொள்கிறார். எனவே அவர் கண்ணம்மாவுடன் வாழ்வதற்கு விரைவில் சம்மதம் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…