விவாகரத்திற்குப் பின்னர் சமந்தா வெளியிட்ட முதல் பதிவு. அதிர்ந்துபோன கணவர் நாக சைதன்யாவின் குடும்பம். அப்படி அவர் கூறியது என்னவென்று தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். அதர்வா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் இப்படம்தான் முதல் படமாக இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகில் இவர்கள் இருவருக்கும் முதல் தொடக்கமே நல்ல தொடக்கமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றிருந்தார் சமந்தா. இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்ட சமந்தா ஐதராபாத்து அவரது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தவறாமல் செய்து கொண்டிருந்தார்.

samandha

சில நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்த சமந்தாவின் அறிக்கை என ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியை தொடர்ந்து இவர்கள் விவாகரத்து சம்பந்தமாக பலவித ரூமர்களும் எழுப்பப்பட்டன. பலரும் இவர்களின் பிரச்சனையை பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு இவர்களுக்குள் விவாகரத்து நடந்து இருவரும் பிரிந்த பின்னர் நடிகை சமந்தாவை பற்றி பலவித வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனைக் குறித்து முதன் முதலாக வாய் திறந்து பதிலளித்து உள்ளார் சமந்தா. அவர் கூறியது என்னவென்றால் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் அனைத்தும் உண்மை அல்ல என்று கூறியுள்ளார்.

samandha

மேலும் சமந்த கூறியது எனக்கு இன்னொரு காதலர் இருக்கிறார், நான் சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது, குழந்தையை கருக்கலைப்பு செய்தது இவ்வாறு என்னை பற்றி வந்த வதந்திகள் அனைத்தும் பொய்யானவை.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவர் எவ்வளவு முக்கியம் என்று தெரியாமல் விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் ஒரு நடிகையின் வாழ்க்கையில் அப்படி அல்ல. எனது திரையுலக வாழ்க்கைக்கு எந்த வித தடங்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனவே இதிலிருந்து குணமடைய எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது.

samantha

எனவே எனக்கு எதிரான வதந்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு தொடர்ந்து எனக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன் இந்த வதந்திகளை ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன். முடிந்தால் எனது மன உறுதியை அசைத்துப் பாருங்கள் என்று சவால் விடும் வகையில் கூறியிருந்தார். இந்த பதிவு தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago