தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். அதர்வா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் இப்படம்தான் முதல் படமாக இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகில் இவர்கள் இருவருக்கும் முதல் தொடக்கமே நல்ல தொடக்கமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றிருந்தார் சமந்தா. இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்ட சமந்தா ஐதராபாத்து அவரது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தவறாமல் செய்து கொண்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்த சமந்தாவின் அறிக்கை என ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியை தொடர்ந்து இவர்கள் விவாகரத்து சம்பந்தமாக பலவித ரூமர்களும் எழுப்பப்பட்டன. பலரும் இவர்களின் பிரச்சனையை பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு இவர்களுக்குள் விவாகரத்து நடந்து இருவரும் பிரிந்த பின்னர் நடிகை சமந்தாவை பற்றி பலவித வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனைக் குறித்து முதன் முதலாக வாய் திறந்து பதிலளித்து உள்ளார் சமந்தா. அவர் கூறியது என்னவென்றால் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் அனைத்தும் உண்மை அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் சமந்த கூறியது எனக்கு இன்னொரு காதலர் இருக்கிறார், நான் சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது, குழந்தையை கருக்கலைப்பு செய்தது இவ்வாறு என்னை பற்றி வந்த வதந்திகள் அனைத்தும் பொய்யானவை.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவர் எவ்வளவு முக்கியம் என்று தெரியாமல் விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் ஒரு நடிகையின் வாழ்க்கையில் அப்படி அல்ல. எனது திரையுலக வாழ்க்கைக்கு எந்த வித தடங்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனவே இதிலிருந்து குணமடைய எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே எனக்கு எதிரான வதந்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு தொடர்ந்து எனக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன் இந்த வதந்திகளை ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன். முடிந்தால் எனது மன உறுதியை அசைத்துப் பாருங்கள் என்று சவால் விடும் வகையில் கூறியிருந்தார். இந்த பதிவு தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.