டிவி

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்..பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்

கேமிராவுக்கு முன் ஒரு பெண் நடிக்க வேண்டுமென்றால் அவர் பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி வரவேண்டியுள்ளது. அது சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எல்லா இடங்களிலும் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இப்படி பிரச்சனைகளையெல்லாம் கடந்து வந்து தற்போது பிரபலமாகியுள்ள பல பிரபலங்கள் தங்களது ஆரம்பர காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகை அபி நவ்யா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ” நான் செய்திவாசிப்பாளராக இருக்கும்போதுதான் பிரியமானவள் என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தேன்.

சீரியலில் நடிக்க வேண்டுமென்றால் அங்கு இருப்பவர்களில் யாரவது ஒருவர் நமக்கு தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம். நான் இப்படி வாய்ப்பு தேடி செல்லும் போதெல்லாம் என் முகத்திற்கு நேரகாவே அட்ஜஸ் செய்து கொள்ள தயாரா என கேட்டார்கள்.

சுமார் 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் சென்றேன். பெரும்பால இடங்களில் இதையே தான் என்னிடம் கேட்டார்கள். இன்ஸ்டாகிராமில் ஒருவர் காஸ்டிங் டைரக்டர் என கூறி என்னிடம் அறிமுகமானார். அந்த நபர் என்னுடைய அங்க அடையாளத்தை கூறி தகாத முறையில் பேசினார். அவரை நான் கடுமையாக திட்டி விட்டேன்.

புதிதாக திரைத்துறைக்குள் வர நினைக்கும் பலருக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கதான் செய்கிறது. ஏமாற்றும் ஆட்களும் அதிகம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் கவனமுடன் இருக்கவேண்டும். திரைத்துறையில் இன்னும் மீடூ புகார்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண்களாகியா நாம் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும்” என்றார்.

சின்னத்திரையில், ‘பிரியமானவள்’, ‘கயல்’, ‘சித்திரம்பேசுதடி’, ‘கண்மணி’, உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியகதாபாத்திரத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான தீபக்குமாரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடைப்பெற்றது. அபிநவ்யாவின் இந்த பேச்சால் சின்னத்திரை வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago