Homeபிக் பாஸ்நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு...

நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு அப்போ உண்மையில் இருக்கா?

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி படு சூப்பராக சென்றுகொண்டு இருக்கிறது. இதில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதில் நமீதா மாரிமுத்துவும் ஒருவர். நேற்றைய தினம் வெளியான ப்ரோமோக்களில் நமீதா மாரிமுத்து இடம் பெற வில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார் என்ற செய்தார் பரவியது. அதை உண்மையாகும் வகையில் பிக் பாஸே அதிகார பூர்வாமாக அதை நேற்றைய நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி விட்டார்.

Namitha marimuthu Bibb boss
Namitha marimuthu Bibb boss

திருநங்கையான நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த பாதை குறித்து நெகிழ்ச்சியாக பல தகவல்களை கூறினார். இதனால் பலரும் அவரை பாராட்டினார். திருநங்கைகளுடைய கஷ்டங்களை கேட்டு பலரும் கண்கலங்கினார். போட்டியாளர்கள் பலரும் அவருக்கு ஹார்ட் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அவருக்கும் தாமரை செல்விக்கும் இடையே சில வாகு வாதங்கள் ஏற்பட்டது. அந்த சமயத்தில், வயது வித்யாசம் பார்க்காமல் நான் நன்றாக கேட்டு விடுவேன் என்று நமீதா கூறியது பலரையும் முகம் சுழிக்க செய்தது. அதே வேலையில் தாமரை நமீதாவிடம் மன்னிப்பு கேட்டும் அவர் தாமரையை மன்னிக்க தயாராக இல்லாமல் இருந்தார்.

இதையும் படிக்கலாம்: பெசன்ட் நகர் ரவியின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா? அப்பா கருப்பு என்றாலும் பொண்ணு தகதகவென மின்னும் தங்கம்.

இந்த சூழலில், தாமரை தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் நமீதா அவரை எழுப்பி, நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்று கூறியதை நாம் பார்த்தோம். அதே போல, பாசமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் என்னிடம் இருந்து அதிகமாக கிடைக்கும் என்றும் நமீதா தாமரையிடம் கூறினார்.

Namitha marimuthu
Namitha marimuthu

இப்படி இருக்கையில், திடீரனென்று நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இது குறித்து கசிந்த தகவலில், நமீதா, பிக் பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அதோடு அவர் அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாராம். ஆனால் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. நமீதா இரவு 3 மணிக்கு மேல் வரை விழித்திருந்து உலாவி வந்ததை நாமே பிக் பாஸ் வீட்டில் பார்த்தோம். இரவெல்லாம் தூங்காமல் இருந்தால் இப்படி நடக்க சாத்தியம் உண்டு என்றே கூறலாம்.

சற்று முன்