பெசன்ட் நகர் ரவியை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த லக்கி மேன் படத்தின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் பல்வேறு படங்களில் சண்டை காட்சிகளில் நடிக்க துவங்கினார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் படத்தில் இவர் நடித்த காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

தற்போது பெசன்ட் நகர் ரவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வேடர்கள் அணி, கண்டார்கள் அணி என போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த டாஸ்குகளை ரவி தன்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, யாரை எலிமினேட் செய்யலாம் என்ற ஒரு விவாதம் வந்த போது, சிலர் ரவியை எலிமினேட் செய்யலாம் என்ற கருத்தை முன்வைக்க துவங்கினர். அதற்க்கு காரணமாக அவர்கள் கூறியது ரவியின் வயது தான். அவருக்கு வயதாகி விட்டது அதனால் டாஸ்குகளை செய்ய இயலவில்லை என்பது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டது.
இதையும் படிங்க: கண்ணாத்தாள் படத்தில் நடித்த நடிகையா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பெசன்ட் நகர் ரவியின் மகள் தனது சமூக வலைதள பக்கத்தில் ரவி குறித்த சில தகவல்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிப்பது என்னவென்றால், என் அப்பா சில படங்களில் வில்லனாக நடித்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோ தான். போட்டியாளர்கள் சிலர் என் அப்பாவுக்கு வயதாகிவிட்டது என்று கூறினாலும் என் தந்தை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

போட்டியில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் என் அப்பா சர்வைவர் தான். இப்படியாக ரவியின் மகள் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவருடைய புகைப்படமும் வைரலாகி வருகிறது. அதே சமயம் ரவியின் மகள் கூறியது போல அவர் நிஜ வாழ்க்கையிலும் பல கடினமாக பாதைகளை கடந்து தான் இந்த நிலையை அடைந்துள்ளார். ஆகையால் இந்த போட்டியில் அவர் வென்றாலும் வெளியேறினாலும் அவர் சர்வைவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.