அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 நேற்று முதல் நாளாக துவங்கப்ட்டது. சென்ற முறை நடந்த பிக் பாஸ் 4 டிஆர்பி யில் அதிக வசூலைக் கொடுத்தது. அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் அடுத்த பிக் பாஸ் ஷோ வினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வருகின்ற 16 நபர்களில் யார் வெற்றியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கும். அவ்வாறு பிக்பாஸ் நான்காம் சீசன் வெற்றியாளராக நடிகர் ஆரி அவர்கள் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் 1 சீசனில் வெற்றியாளராக இல்லாவிட்டாலும் ஓவியா தான் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். அதன் பிறகு அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆரி அவர்கள்தான்.

நேற்று கமல் அவர்கள் முதலில் பிக்பாஸ் வீட்டைச்சுற்றி காண்பித்து அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களாக அறிவித்து அவர்களை வரவேற்றார். முதல் போட்டியாளராக சென்னை ராயபுரம் கிளைபேட்ரியை சேர்ந்த கானா புகழ் இசைவாணி அவர்கள் தனது கானா பாடலுடன் அவரின் பிக் பாஸ் பயணத்தை துவங்கினார்.
இரண்டாவதாக விஜய் டிவியின் உச்சத்தைத் தொட்ட வெற்றி சீரியலான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ராஜூ அவர்கள் வரவேற்கப்பட்டார். இவர் பல சின்னத்திரை தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில நடிகர்களை போன்று மிமிக்ரி செய்வதில் வல்லவர் ஆவார். பாக்கியராஜ் அவர்கள் போன்று தனது குரலை மாற்றி பேசி காண்பித்தார். இதனை வீடியோ மூலம் பார்த்து ரசித்த பாக்கியராஜ் அவர்களும் வாழ்த்துக்கள் கூறி ராஜுவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

மூன்றாவதாக ஆர்ஜே அபிஷேக் அவர்கள் தோன்றினார். இவர் பல முன்னணி நடிகர்களை பேட்டி எடுத்துள்ளார். இவரின் இயல்பான பேச்சும், துடிப்பான நடவடிக்கையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.
நான்காவதாக ஜெர்மனியை சேர்ந்த ஆடை அலங்கார அழகி ஒருவர் இடம் பெற்றார். இவர் இலங்கையை சேர்ந்தவராம். தற்போது குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். இவர் ஒரு வருடம் ஆஸ்திரேலியா சென்று ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றி தற்போது சென்னையில் சினிமா துறையில் நட்சத்திரங்களுக்கு ஆடை அலங்காரம் செய்பவராக இருக்கிறார்.

ஐந்தாவதாக வரவேற்கப்பட்டவர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு திருநங்கைகளுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற நமிதா அவர்கள். இவர் ஒரு திருநங்கை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது இன்ஜினியர் பட்டப்படிப்பின் நான்காவது வருடத்தில் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு தனது விருப்பத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டார். தற்போது பெற்றோர்களுடன் சேர்ந்து இருக்கும் நமிதா மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு போன்ற பட்டங்களை வென்றிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே அனைவரும் இவரது உயரத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் காலில் ஹுல்ஸ் அணிந்து இருந்ததால் இன்னும் அதிக உயரத்தில் இருந்தார். அபிஷேக் அவர்கள் இதனை போடுவதற்கென்று ஒரு பக்குவம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு நமிதாவும் நிச்சயம் பயிற்சி இல்லாமல் ஹீல்ஸ் போட்டு நடப்பது கடினமான விஷயம் தான் என்று கூறினார். இவர்கள் அனைவரும் நமிதாவின் உயரத்தை பற்றி பேச நமிதா உடனே தனது செருப்பை கழட்டி வைத்தார். ராஜீவுடன்டன் நின்று தனது உயரத்தை அளந்து பார்த்த பொழுது அதில் ராஜு அவர்களே வெற்றி பெற்றார்.