கோவை மாவட்டத்தில் பிறந்த எம் ஜி ஆரின் தீவிர ரசிகனாக இருந்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சத்யராஜ். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ரங்கராஜ் தனது பள்ளிப்படிப்பை முடித்து கோயம்புத்தூரின் கலைக்கல்லூரியில் இளங்கலைத் தாவரவியல் பட்டமும் முடித்தார். அங்கே பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் பியூசி படித்து வரவே அங்கேதான் இவர்களுடைய நட்பும் உருவானது என்று பேசப்படுகிறது.
பிறகு சத்யராஜ் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகராக மாறி வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தை இயக்கி, லீ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே, என்னம்மா கண்ணு, தகடு தகடு, என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். அவருக்கே உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், நகைச்சுவை போன்ற கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படமும் வரலாறு படைத்த படங்களாக மாறி அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது. அவர் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் அனைத்து கதா நாயகிகளோடும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இதோடு சேர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, என இன்னும் பல விருதுகளை வென்று இன்றளவும் தமிழ் சினிமாவில் தன் திறமையால் நிலைத்து நிற்கிறார்.
இப்போது 1945, ஷ்யாம், பக்கா கமர்சியல், தமிழில் எதற்கும் துணிந்தவன், பார்ட்டி காக்கி, போன்ற படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சத்யராஜின் கெரியருக்கு முக்கியமாக அமைந்த திரைப்படம் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2. இதில் சத்யராஜ் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்து தமிழ் மக்களால் அதிகம் பாராட்டப்பட்டார். அதற்காக அவர் வாங்கிய சம்பளம் பாகுபலி 1காக ஒரு கொடியும் பாகுபலி 2 காக 2 கோடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…