பொழுதுபோக்கு

வேற வழியில்லாமல் நாகசைதன்யா சம்மதித்திருக்கலாம்.. நாகர்ஜூனா பரபரப்பு பேச்சு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சம்ந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் இணைந்து சினிமாவில் நடித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்தாண்டு சமந்தா தனது சமூகவலைதளப்பக்கத்தில் நாகசைத்தன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களை மட்டும்மல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே நாகசைதன்யா கூறும்போது பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சமந்தாவும் நாகசைத்தன்யாவும் அவரவர் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய பாடல் சமூகவலைதளத்தில் பெரும் வைரலானது. இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் ‘பங்கர் ராஜு’ என்ற திரைப்படம் நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். படமும் ரிலீஸ் ஆகி வசூலை வாரிகுவித்து வருகிறது.

பங்கர் ராஜூ படம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நாகர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த விவாகரத்து விஷயத்தை நாக சைதன்யா மிகவும் அமைதியாக கையாண்டார்.

எல்லா அப்பாவையும் போலவே நானும் அவரை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அவர் எங்களை பற்றி அதிகம் கவலைப் பட்டார். இந்த சமயத்தில் நானும் என் குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தோம். இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவின் முடிவு மட்டுமே. அவர்தான் விவாகரத்துக்கு மிகவும் ஆசைப்பட்டார்” என்றார்.

நாகார்ஜுனாவின் இந்த பேட்டியை வைத்துப் பார்க்கும்போது விவாகரத்து முடிவு சமந்தாவால் மட்டுமே எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் வேறு வழியில்லாமல் நாக சைதன்யாவும் அதற்கு சம்மதித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்றும் சமந்தாவின் மகிழ்ச்சி எனக்கு ரொம்ப முக்கியம் என்றும் கூறியிருந்தார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago