சின்னத்திரையில் தொகுப்பாளினி, விஜே, செய்திவாசிப்பாளராக வருபவர் பின் வெள்ளித்திரையிலும் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில், விஜே ஜாக்குலின் தற்போது சினிமாத்துறையில் கால் பதித்துள்ளார்.

ஜாக்குலின் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் தொகுப்பாளியாக வரும் முன்பு ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆண்டாள் அழகர்’, ‘தேன் மொழி பி.ஏ’ போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஜாக்குலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திலும் ஜாக்குலின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்குலின் தனது சமூகவலைதளத்தில், நீச்சல் குளத்திலிருந்து பிகினி உடையிலிருந்து மேலே ஏறிவரும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஜாக்குலினை இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் சற்று வியப்பை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது ரசிகர்கள் ஜாக்குலினின் பிகினி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அதிகம் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.