விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி “நீயா நானா”. மிகவும் அத்தியவாசிய தலைப்புகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வந்தார்.

சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கனவன் மனைவி வருமானம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் கனவரை விட அதிகம் சம்பாரிக்கும் மனைவி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அப்பாவியாக எழுந்து நின்ற கனவர், “சார், என் மனைவி எனக்கு போனே கொடுக்க மாட்டேங்குறார் சார்” என புகார் அளித்தார். இதனை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், “என்னது உங்களுக்கு செல்போனே இல்லையா? அதுவும் இந்த காலத்துலயா? என பதறியபடி கேள்விகளை கேட்டார்.

இதற்கு பதில் கூறிய அவரின் மனைவி, “சார் இவர் செக்யூரிட்டி வேலை செய்கிறார் சார், அங்கு போன் அனுமதி இல்லை சார், நான் ஆபிஸ்ல வேலை செய்கிறேன், நான் போன் வச்சிருக்கேன் சார்” என காரணம் கூறினார். இதனை கேட்ட கனவர், “சார் நான் வேலை பார்க்கும் இடத்துல போன் யூஸ் பன்ன அனுமதி இல்ல தான், ஆனா வீட்டுக்கு வந்த பின் போன் பார்த்து பொழுதை கழிப்பேன்ல, நீங்க சொல்லி எனக்கு ஒரு போன் வாங்கி தர சொல்லுங்க சார்” என அப்பாவியாக கேட்டார்.
இதனை கேட்டு பரிதாபபட்ட கோபிநாத், “என்னங்க இது அநியாயமா இருக்கு, ஒரு போன் கூட வச்சிருக்க கூடாதா? அவருக்கு ஒரு போன் வாங்கி தர கூடாதா? என கேட்டார். அதற்கு மனைவி, “சார் அவர் நைட் 11 மணிக்கு மேல போண்ல விளையாடுவாரு சார், என் போன்ல விளையாடிகிட்டே இருப்பாரு சார், தினமும் இரவு என் போன் யூஸ் பன்னுவாரு சார்” என்றார்.

இதனை கேட்ட கோபிநாத், “என்னங்க நீங்க எந்த காலத்துல இருக்கீங்க… ஒரு அவசர தகவல் உங்களுக்கு சொல்லனும்னா கூட அவருக்கு ஒரு போன் வேணாமா? தினமும் நைட் 11 மணிக்கு மேல நீங்க தூங்குனதுக்கு பிறகு தான் அவரு உங்க போன் யூஸ் பன்னனும்னா இது ஞாயமா?” என கேட்டார். இதனை கேட்ட மனைவி, “சார்… அவரு போன்ல ஆன்லைன் ரம்மி விளையாடுறாரு சார், என் பையனையும் சேர்ந்து கெடுக்குறார்” என கூற..
“என்னது ஆன்லைன் ரம்மியா…. இவருக்கு போன் வாங்கி கொடுக்காதது சரி தான்மா… இனிமேலும் வாங்கி கொடுக்காதீங்கம்மா என கூறினார். முதலில் அந்த அப்பாவி கனவர் பேசுவதை கேட்டு ஆதங்கபட்ட அனைவரும் பின் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தெரிந்து கொண்ட பின்னர் அவர் மனைவி செய்தது ஞாயம் தான் என புரிந்து கொண்டனர்..