கடந்த 2015ம் ஆண்டு பிரபல இயக்சுநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து பான் இந்தியா படமாக தமிழ், தெழுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிரம்மாண்ட சூப்பர் ஹிட் திரைப்படம் “பாகுபலி தி பிகினிங்”. இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பகுதியான ” பாகுபலி தி கன்க்லூசன்” படம் 2017ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடதக்கது.

பாகுபலி படத்தில் வில்லனாக “பல்வாள் தேவன்” என்ற கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடற்கட்டில் அதிபயங்கரமான சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியவர் இளம் நடிகர் ராணா டகுபதி, வயது 37, சென்னையில் பிறந்து ஹைத்ராபாத்தில் வளர்ந்த நடிகர். இவருடைய இயற்பெயர் ராமா நாயுடு டகுபதி. இவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் D சுரேஷ் பாபுவின் கலை வாரிசாவார்.
கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான “லீடர்” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகர் ராணா டகுபதி, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். பான் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், தயாரிப்பாளராகவும், சின்னத்திரை தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார்.

“ஆரம்பம்”, ” பெங்களூர் நாட்கள்”, “எனை நோக்கி பாயும் தோட்டா”, “காடன்” உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ஆர்யா இன்று தன்னிடம் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்று நடிகர் ராணா தன் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு த்ன குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடித்து கோவில் சார்பாக நடிகர் ராணாவுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் ராணாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் நடிகர் ராணாவை நெருங்கி வந்து அவருடன் செல்பி எடுக்க முயல, நடிகர் ராணா புன்னகைத்தபடி அவர் செல்போனை பறித்தார். அந்த ரசிகரும் புன்னகைக்க, ஒரு சில நொடிகளில் போனை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார் நடிகர் ராணா. இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.