விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.
சமீபகாலமாக விஜய் தான் நடிக்கும் படத்தில் அரசியல் குறித்தான விழிப்புணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் விதம் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘தளபதி 66’ படமும் அமையும் என தெரியவந்ததுள்ளது. ‘தளபதி 66’ படத்துக்காக தமிழில் அனல்பறக்கும் அரசியல் வசனங்களை பிரபல இயக்குநர் ராஜூ முருகன் எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ” எனது திரை வாழ்க்கையில் தளபதி 66 திரைப்படம் மிக முக்கியமானது. இப்படத்திற்காக பிரம்மாண்டமான காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். தளபதி 66 படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துவிட்டது.

இப்படத்தின் கதையை வம்சி விஜய்யிடம் கூறிய பின், இதுதான் நான் கடந்த 20 வருடத்தில் கேட்ட சிறந்த கதை. இப்படி ஒரு குடும்ப கதையை நான் கேட்டதில்லை என விஜய் கூறினார். அந்த அளவிற்கு படத்தின் கதையை இயக்குநர் வம்சி நன்றாக செதுக்கியுள்ளார்.
படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்தை தீபாவளிக்கு வெளியட திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது” என்று கூறினார்.