தமிழ் சினிமா உலகில் வைகை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இவருடைய இயற் பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான “என் தங்கை கல்யாணி” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கான இடத்தை பிடித்தார் நடிகர் வடிவேலு. முதலில் நடிகர் வடிவேலு, கவுண்டமனி-செந்திலுடன் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தனியாக நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வருகிறார்.
தற்போது தமிழ் சினிமா உலகில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தின் நகைச்சுவை வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக விராப்-அப் பார்ட்டி சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில், வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய 61வது பிறந்த நாளை வைகைப்புயல் வடிவேலு கொண்டாடுகிறார், இதனை நேற்று “மாமன்னன்” படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.