தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலமாக முன்னணி நடிகராக முன்னேறியவர் நடிகர் தனுஷ். மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது உழைப்புக்கு பலனாக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’,பாலிவுட்டில் அக்ஷயகுமாருடன் ‘அட்ரங்கி ரே’, டோலிவுட்டில் ‘வாத்தி’ என அனைத்து மொழி திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.
தெலுங்கில் ‘வாத்தி’ என்ற பெயரில் உருவாகும் படத்தை தேசிய விருது வென்ற வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதை வம்சி, சாய் செளஜன்யா ஆகியோர்இணைந்து தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘வாத்தி’ படத்தில் தனுஷின் மேக்கப், ஆடை வடிவமைப்புக்கு ஆகும் செலவை கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆச்சரியத்தில் உள்ளார். காரணம் பொதுவாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் படத்தில் அவர்களுக்கான ஆடை அலங்காரம், மேக்கப், அணிகலன்களுக்கு கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் செலவழிப்பது வழக்கமான ஒன்று.
ஆனால் ‘வாத்தி’ படத்திற்கு தனுஷின் ஆடை வடிவமைப்புக்கு மொத்தமே ஏழு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் இந்த எளிமையை கண்டு வாத்தி படத்தின் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளனர். மேலும் தனுஷின் இந்த எளிமையே அவரது அசுர வளர்ச்சிக்கு காரணம் எனவும் பாராட்டியுள்ளனர்.