தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவரான உன்னி கிருஷ்ணனை பற்றி நாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். இவர் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிறகு இவரது புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. தன்னுடைய இசை ஞானத்தால் இதுவரை எத்தனையோ போட்டியாளர்களை மெருகேற்றி உள்ளார் இவர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில், இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த காதலன் படத்தில் இடம் பெற்ற “என்னவளே” பாடலை இன்றைய தலைமுறை பிள்ளைகள் கூட முணுமுன்பது வழக்கம். அந்த அளவிற்கு அந்த பாடல் இனிமையாக இருக்கும். அந்த பாடலை பாடியவர் உன்னி கிருஷ்ணன் தான்.

என்னவளே பாடல் தான் தமிழ் திரைத்துறையில் இவர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பவித்ரா என்ற படத்திற்காக “உயிரும் நீயே” என்ற பாடலை பாடினார். “தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம்”, “மீனம்மா அதிகாலையிலும்” இப்படி அடுத்தடுத்து ஹிட் பாடல்களை தனது குரலின் மூலம் தந்தவர் உன்னி.

இதுவரை இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஆயிரக்கணக்கில் பாடல்களை பாடி உள்ளார். சினிமாவில் மட்டும் அல்லது ஏராளமான பக்தி பாடல்களும் இவரது குரலில் வெளிவந்துள்ளது. அதே போல கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளை இவர் தன் பாடலுக்காக பெற்றுள்ளார்.

இதையும் படிக்கலாமே: சீரியலுக்கு வந்த செந்தில், ராஜலட்சுமி ஜோடி. எந்த சீரியல் தெரியுமா? அதிலும் இந்த தொலைக்காட்சியிலா? அப்போ விஜய் டிவி?
காதலன் படம் வெளியான அதே ஆண்டில் இவருக்கு திருமணமும் நடந்தது. கேரளாவை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை இவர் மணந்தார். இந்த தம்பதியருக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகனும், உத்தாரா என்ற மகளும் உள்ளனர். “சைவம்” திரைப்படத்தின் மூலம் தனது முதல் திரை பாடலை பாடினார் உத்தாரா. “அழகு” என்று துவங்கும் அந்த பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அற்புதமான கலைக்குடும்பம் வசிக்கும் வீட்டின் புகைப்படங்களை தான் மேலே நாம் பார்த்தோம்.