சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகம் எங்கு புகழ்பெறார்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. சூப்பர் சிங்கர் சீசன் 6ன் வெற்றியாளராகவும் செந்தில் கணேஷ் இருந்தார். மக்களிசை பாடர்களான இவர்கள், பல அருமையான பாடல்களை பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மெருகேற்றினர் என்றால் அது மிகையாகாது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர்களை உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி தான்.

சூப்பர் சூப்பர் நிகழ்ச்சியை தொடர்ந்து செந்தில், பல திரைப்படங்களிலும் பாட துவங்கினார். இவர் தனது முதல் திரை பாடலை சீமா ராஜா என்ற படத்திற்காக பாடினார். அந்த படத்தில் இடம் பெற்ற “பராக் பராக்” பாடலை பாடியது இவர் தான். அதனை தொடர்ந்து, பலராலும் முணுமுணுக்கப்பட்ட “சின்ன மச்சான்” என்ற பாடலை சார்லி சாப்ளின் படத்திற்காக பாடி இருந்தார். இந்த பாடலை ஏற்கனவே அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி இருந்தது குறிப்பிட தக்கது.
2020 இல் வெளியான சூரரை போற்று படத்தில் இடம் பெற்ற மண்ணுருண்ட பாடலை பாடியது இவர் தான். ஜி.வி பிரகாஷ் இசையில் அந்த பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படி இவர் கிட்டத்தட்ட 8ம் மேற்பட்ட திரை பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு அப்போ உண்மையில் இருக்கா?
இது தவிர செந்தி ராஜலட்சுமி ஜோடி, ஏராளமான கலை நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ராஜலட்சுமி, பாடல்களை காபி அடித்து பாடுகிறார் என்ற குற்ற சாட்டு எழுந்து, அதற்க்கு ராஜலட்சுமி பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த ஜோடி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர்களோடு சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த சீரியலில் நவராத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றைல் இந்த ஜோடி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது திருவிழா அல்லது ஏதுனும் ஒரு பாடல் காட்சியாகவும் இருக்கலாம்.