தமிழ் சினிமாவில் உருவாகிவரும் சின்ன நடிகைகள் சிலர் பிரபலமாக வேண்டும் என்பதனை மனதில் வைத்து இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிடுவது இப்போது அதிகமாகி வருகிறது.

அதில் ஒரு நடிகை தான் தேஜு அஸ்வினி இவர் சென்னையில் பிறந்து வித்யாலயா கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்லூரி முடித்திருக்கிறார். மாடலிங், டான்ஸ், போன்ற துறைகளில் வலம் வந்து கொண்டிருந்த அஸ்வினி தன் நண்பரான அன்பு உடன் சேர்ந்து “பேர்ல என்ன இருக்கு” என்ற சார்ட் பிலியில் நடித்து முடித்து கல்யாண சமையல் சாதம் என்கிற வெப்சீரிஸ் இருவரும் இணைந்து நடிக்க தொடங்கவே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதோடு ஆல்பம் பாடலான அஸ்க்குமோரா வீடியோவில்தான் இன்னும் அதிகமான ரசிகர்களை இவர் கவர்ந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சந்தானத்தின் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ்யராஜ் என்கிற திரைப்படத்திலும் சிறிய நடன காட்சியில் நடித்திருக்கிறார்.

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் இணைந்து “என்ன சொல்லப் போகிறாய்” என்ற படம் நடித்திருக்கிறார். இந்த படம் திரையில் வந்து பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளம் பக்கம் தன் கவனத்தை திருப்பிய அஸ்வினி, தனது சமூக வலைதள பக்கத்தில் புதிதாக பல புகைப்படங்களை பதிவேற்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்.

தற்போது சிகப்பு நிற புடவையில் கண்ணாடி பதுமை போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ரொம்ப அழகா இருக்கீங்க, அற்புதம் இப்படி கமெண்ட்களை அல்லி தெளித்துள்ளனர்.