இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகை சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக டாக்டர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்து வருகிறது.

மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சிம்பு கெரியரில் பாக்ஸ் ஆபிசில் புதிய உச்சம் தொட்டதை சமூக வலைதள பக்கத்தில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சில குறும்புக்கார சமூக வலைதளவாசிகள் “வெந்து தணிந்தது காடு” படம் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான “நெஞ்சினிலே” படத்தின் ரீமேக் என்று ட்ரோல் செய்து வருவது சற்று வேடிக்கையாக தான் உள்ளது.
என்னதான் இது வேடிக்கையாக இருந்தாலும் 1999ம் ஆண்டு வெளியான “நெஞ்சினிலே” படத்திற்கும் நேற்று வெளியான “வெந்து தனிந்தது காடு” படத்திற்கும் சில ஒற்றுமைகளும், குறிப்பாக திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருக்க தான் செய்கிறது. இரண்டு படங்களிலும் நாயகன் பிழைக்க முந்பை செல்கிறான். இரண்டு படங்களிலும் நாயகன் வேண்டா வெறுப்பாக நண்பனுக்காக அடிதடியில் இறங்கி டான் ஆகிறார்கள்.

“வெந்து தணிந்தது காதல்” படத்தின் நாயகி சித்தி இத்னானிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி வந்து கர்ஜி ரூமில் இருப்பதும், நாயகியை நாயகன் சிம்பு காப்பாற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதே போல “நெஞ்சினிலே” படத்தின் நாயகி இஷா கோபிகரை வில்லன் கடத்தி வந்து கட்டி போட, ஒருவன் நாயகியை கெடுக்க முயல, நாயகன் விஜய் நாயகியை காப்பாற்றும் காட்சி படமாக்கபட்டுள்ளது.
கதாநாயகியின் இந்த கடத்தல் காட்சி தான் “வெந்து தணிந்தது காடு” மற்றும் “நெஞ்சினிலே” படத்தில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டுமின்றி “வெந்து தணிந்தது காடு” படத்தில் வில்லன் இசக்கி உடன் இருக்கும் ரவுடிகள் கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளில் சிம்பு பக்கம் வந்து நிற்பது போல “நெஞ்சினிலே” படத்திலும் வில்லன் உடன் வந்த ரவுடிகள் விஜய்க்கு ஆதரவாக வில்லனை சுட்டு கொலை செய்வார்கள்.

“வெந்து தனிந்தது காடு” படத்திற்கும் 23 ஆண்டுகளுக்கு முன் வெளியான “நெஞ்சினிலே” படத்திற்க்கும் இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால் “வெந்து தனிந்தது காடு” படம் விஜய் படத்தின் ரீமேக் என்று குறும்புக்கார சமூக வலைதள வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.