நடிகை ஷிவானி நாராயணன் 2001 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் நாராயணன் அகிலா தம்பதியினருக்கு பிறந்தவர். ஷிவானியின் தந்தை நாராயணன் பிரபல தொழிலதிபர் எனவும் அவருக்கு ஷிவானி ஒரே பெண் குழந்தை எனவும் கூறப்படுகிறது. ஷிவானி பெட் லவ்வர் எனவும் டைமன்ட் என நாய் குட்டி ஒன்று வலர்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.

ஷிவானி சிறுவயதில் தனது தாத்தா பாட்டி வீடான சென்னைக்கு போய் வருகையில் ஷிவானி நாராயணனுக்கு சென்னை பிடித்துப்போகவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆனார்கள். ஷிவானி சென்னையில் வித்யா மந்தேஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து மாடலிங் ஆக்டிங் பக்கம் திரும்பினார். தனது மொபைல் போனில் டப்ஸ்மாஷ் செய்து வலைதளங்களில் பதிவிடவும் லைக்கும் சேரும் அள்ளிக்கொண்டு போனது. இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே தனது கனவை நினைவாக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்
.
இந்த சீரியலில் காயத்ரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனை தொடர்ந்து பகல் நிலவு என்னும் சீரியலில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்த பெண் விலக சிவானி நடித்து வந்தார். இதனை நிறைவு பெறாமல் இரட்டை ரோஜா என்னும் சீரியலில் இரட்டைக் கதாபாத்திரங்களாக நடித்து வந்தார். பிறகு கோரானா ஊரடங்கு போடவே திரையுலகம் மூடிய நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தார். தினமும் மாலை அவர் மாடர்ன் ஆடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படம் சீரியல்களில் குடும்ப குத்து விளக்கை போல நடித்த ஷிவானியின் உண்மை முகத்தை காட்டிச் சென்றது

இதன் பின்பு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அங்கே பிக் பாஸ் வீட்டில் பாலாவிற்கும் ஷிவானிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி இருப்பதாகவும் வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. தற்போது இருவரும் ஒரே நிறத்தில் நாய்க்குட்டிகளை வாங்கி ஒரே பெயர் வைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் நாய் சேகர் படத்திலும் சிவானி நடித்து வரவே சந்தோசத்தில் தன் ஆடைகளை குறைத்துக் கொண்டே வருகிறார். இன்ஸ்டாகிராமில் மாலை இவர் வெளியிடும் மாடர்ன் ஆடை புகைப்படத்திற்கு பெரும் பட்டாளமே காத்திருக்கிறது. இதனால் லைக்கும் கமெண்டும் லட்சக்கணக்கில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அந்த வகையில் தற்போது சேலையில் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.