சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அதில் விதிவிலக்காக மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளினி கிரிஜாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

சின்னத்திரையில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை கிரிஜா தொகுத்து வழங்கினார். சமையல் மந்திரம் என அந்த நிகழ்ச்சிக்கு பெயர்வைத்தால் கிரிஜாவை ரசிகர்கள் சமையல் மந்திரம் கிரிஜா என்றே அழைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், திருமணமான ஆண்கள், பெண்கள் என பலரும் தங்களது அந்தரங்க பிரச்சனைகள் பற்றி மருத்துவர்களிடம் பேசுவார்கள்.
இது தொடர்பான விளக்கங்களை கிரிஜா மருத்துவரிடம் தயக்கமில்லாமல் பேசுவார். இதுவே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய கரணமாக அமைந்தது. அதே நேரத்தில் ஒரு பெண் பொதுவெளியில் இதுபோன்ற விஷயங்களை எப்படி பேசலாம் என்று கூறி பலர் கிரிஜாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தனர்.

இந்த விமர்சனங்களையெல்லாம் கிரிஜா தைரியமாக எதிர்கொண்டார். அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சி முற்றிலும் மருத்துவம் சார்ந்தது. இதன் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர். எனவே யாரும் இந்த நிகழ்ச்சியையோ என்னையோ குறித்து தவறாக நினைக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட கிரிஜா சமையல் மந்திரம் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் தற்போது மும்பையில் படித்துவருகிறார். இதற்கிடையில் கிரிஜா தனது நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கணவருடன் கிரிஜா ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு முரட்டு சிங்கிள் பசங்களை சீண்டி பார்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருக்கும் கிரிஜாவை அவரது கணவர் ஆசையுடன் தூக்கி சென்று கட்டிலில் போடும் படம் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.