சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.

‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ரோஷினி அந்த தொலைக்காட்சிக்கு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஷினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாகவும் அதனால் தான் தொடரை விட்டு விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ரோஷினி மீண்டும் தொலைக்காட்சிக்கே திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி தொலைக்காட்சிக்கு திரும்பிய ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்காமல், குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரும்பி வந்துட்டேனு சொல்லு என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.