Homeபுகைப்பட செய்திஇறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட இறுதி சுற்று பட நாயகி..

இறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட இறுதி சுற்று பட நாயகி..

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகில் வெளியான திரைப்படம் “இறுதி சுற்று”, ஹிந்தியில் “சலா கதூஸ்” என்ற பெயரில் இந்த படம் வெளியானது.

குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், முழு பெயர் ரித்திகா மோஹன் சிங், வயது 27, மும்பையில் பிறந்து வளர்ந்தவர், நாயகியாக தன் திரை பயணத்தை தொடங்கினார். “இறுதி சுற்று” திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் எதார்த்தமான நடிப்பு சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

நடிகை ரித்திகா சிங் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்தியா சார்பாக 4 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் கண்ட வீராங்கனை. இறுதி சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து ரித்திகா சிங் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் பயனாக தமிழ் திரை உலகில் முன்னனி நாயகியான ரித்திகா ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மற்ற நடிகைகள் போல புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் நடிகை ரித்திகாவும் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார். இது மட்டுமின்றி கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை ரித்திகா சிங்.

என்ன தான் கிளாமராக நடித்தாலும் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ரித்திகா. தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் உருவாகி வரும் “பாக்சர்”, “பிச்சைக்காரன் 2”, “வனங்காமுடி” மற்றும் “கொலை” ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் சில பல காரணங்களுக்காக இன்னும் படப்பிடிப்பு முடிவடையாமல் உள்ளது குறிப்பிடதக்கது. இதில் “கொலை” படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை ரித்திகா தன் உடற்பயிற்சி மையத்தில் இறுக்கமான மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ்ஸ் டாப்ஸ் மற்றும் இறுக்கமான ஷார்ட்ஸ் அனிந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். நடிகை ரித்திகா சிங்கின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

சற்று முன்