விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது துவங்கி சூடுபிடிக்க ஆரமித்துள்ளது. தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டில் இருப்பதால் மிக சிலர் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்படுகிறார்கள். அதில் முக்கிய இடத்தில் இருப்பவர் ராஜு. இவர் பிக் பாஸ் வீட்டில் செய்யுங்கள் காமெடிகள் அனைத்தும் வேற லெவலில் உள்ளது.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில், கானா கலைஞர் இசைவாணி அவர்கள், “இக்கி” யார் போல இருக்கிறார் என்று இப்போது தான் நான் கண்டுபிடித்துள்ளேன் என்று கூறுவார். அதற்க்கு ராஜு, எனக்கு தெரியும், ஜாமீன் கோட்டையில் ஒரு கிழவி வருவார் தெரியுமா அது போல் தான் உள்ளார். அந்த படத்தில் அந்த கிழவியை பார்த்தல் மட்டும் தான் பயம் வரும் என்பது போல கூறுவார்.
உடனே அதற்க்கு அபிஷேக், நல்லவேளை ஒளவையார் என்று கூறாமல் போனாயே என்று கூறுவார். உடனே இசைவாணி, அவர் “சாகிறா” போன்று இருக்கிறார் என்று நான் கூற வந்தேன் என்பார். உடனே அபிஷேக், அது
சாகிறா இல்லமா ஷகீரா என்பார்.
இதே போல நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வியை பயமுறுத்தும் வகையில் ஒரு திகில் கதையை அவரிடம் சொல்வார். அதை கேட்ட தாமரை செல்வி உண்மையில் பயப்படுவார். அதே சமயம் ராஜு, இக்கியை ஜாமீன் கோட்டை கிழவி மாதிரி உள்ளார் என்று கூறியதை அபிஷேக் இக்கியிடம் போட்டுக்கொடுக்க நினைப்பார்.

ஆனால் ராஜு அதை அப்படியே சமாளித்து, ஜாமீன் கோட்டை படத்தில் ஒரு பயங்கரமான கேரக்டர் உள்ளது. நீங்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றதும் யூட்யூபில் அந்த படத்தை பாருங்கள் என்பார். இக்கியும் நான் பார்க்கிறேன் என்பார். உண்மையில் அந்த ஜாமீன் கோட்டை கிழவியின் முகம் எப்படி தான் இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் பலர் அந்த நேரத்தில் நினைத்திருக்கலாம். அவரின் புகைப்படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.