விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5, நேற்று வெற்றிகரமாக துவங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய இந்த நிழற்ச்சியில் 19 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் பலரும் எதிர்பார்த்த ஷகீலாவின் மகள் மீலா இடம்பெறவில்லை என்பது குறிப்பிட தக்கது.

பிரியங்கா, ராஜு, நிரூபி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, சிபி, தாமரை செல்வி, இக்கி, அக்ஷரா, சுருதி, வருண், நடிய, பாவ்னி, அபினய், நமீதா, அபிஷேக், மதுமிதா, இசை வாணி இப்படியாக 19 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
சென்ற முதல் நாளே சில பல அலப்பறைகள் ஆரம்பமாக துவங்கி உள்ளது. இதில் ப்ரியங்காவின் சத்தம் அதிகமாக உள்ளது என்றே கூறலாம். அதேபோல அபிஷேக் தேவை இல்லாமல் பேசுவதாக தோன்றுகிறது. இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான காட்சியில் நிரூபின் தலை முடி குறித்து பேசிக்கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரியங்கா ஒரு விஷத்தை செய்தார்.
அதாவது தனது தலையில் ஆங்காங்கு ஒட்டி வைத்திருந்த முடிகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை ராஜுவின் கைகளில் கொடுக்க, அவர் அதை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே பிரியங்காவை பார்த்தார். இதற்கு பிரியங்கா கொடுத்த விளக்கம் என்னவென்றால். என் தலையில் முடி இருந்தாலும் அடர்த்தியாக இல்லை.

முடி கொஞ்சம் அதிகமாக இருக்கும்படி காட்டிக்கொள்வதற்காக தான் இதை எல்லாம் தலையில் வைத்துள்ளேன். இதெல்லாம் ஒரிஜினல் என்று நினைத்தாயா, கிடையவே கிடையாது என்று கூறி இருந்தார். இதை கேட்டு அந்த இடத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.