பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது ஜீ தொலைக்காட்சியின் ஒரு தொடரில் வில்லி கதாபாத்திரத்தை கைப்பற்றியுள்ளார். ஜீ தமிழில் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் திருமதி ஹிட்லர். இதில் அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமித் பார்க்கவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தத் தொடரில் மூத்த மருமகளாக அனைவரையும் மிரட்டும் வகையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சௌமியா திடீரென இந்த தொடரை விட்டு விலகியுள்ளார். இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது இவர் நடித்து வந்த அர்ச்சனா எனும் கேரக்டரில் தற்போது விஜே மகாலட்சுமி அவர்கள் நடிக்கத் துவங்கியுள்ளார்.
இவ்வாறு இவர் நடிக்க ஆரம்பித்துள்ள தொடர்களும் ஜீதமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மகாலட்சுமியின் ரசிகர்கள் ஜீ தமிழுக்கு படையெடுத்துள்ளனர். இவர் முதலில் விஜேவாக தான் அறிமுகமானார். அவர் ரசிகர்களுடன் தொலைபேசியில் உரையாடும் பொழுதே பல ரசிகர்கள் இவரிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் பேச்சு இனிமையாக இருக்கிறது என்று புகழ்ந்துள்ளார்கள். இவ்வாறு விஜேவாக இருக்கும் பொழுதே தனக்கு என தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் மகாலட்சுமி.

அழகான முகவெட்டு, கவர்ச்சியான ஆடை அலங்காரம் என அழகு பொக்கிஷமாக இருந்த மகாலட்சுமி சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் பட்டு என்று ரசிகர்களிடம் கேட்டுபதே அவ்வளவு அழகாக இருக்கும். அதனைத் தொடர்ந்து இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை போனிலேயே பேசிப்பேசி அலுத்துப் போச்சு அதனால்தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்றும் கூறியிருந்தார்.
இவர் சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு குழந்தை இருக்கின்ற சமயத்தில் இவர் தனது கணவரை விவாகரத்து செய்தார். இவர்களின் விவாகரத்துக்கான காரணம் இன்று வரையில் பெரியதாக எவருக்கும் தெரியவில்லை. ஆனால் தற்போது சிங்கிள் மதராக இருக்கும் மகாலட்சுமி பலவித சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். இதனால் ரசிகர்கள் வட்டாரத்தில் இவருக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டது. ரசிகர்களின் கேள்விகளும், சர்ச்சைகளும் அதிகமாக இருந்ததால் அதனை சமாளிக்க முடியாத மகாலட்சுமியை சிறிது நாட்கள் சமூக வலைதளங்களுக்கு முழுக்கு போட்டிருந்தார்.

தற்போது இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவ்வாறு வலைத்தளங்களிலும் ஆக்டிவாக வலம் வருகிறார் மகாலட்சுமி. இந்த சூழ்நிலையில் இவர் பதிவிட்டுருந்த ஒரு புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

தற்போது இவர் டாப் ஆங்கிளில் வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இளசுகளை உசுப்பேத்தி விட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தாறுமாறாக கமென்ட் செய்து வருகிறார்கள்.