மலையாள திரை உலகில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் நடிகர்கள் சிஜு வில்சன், அனூப் மேனன் மற்றும் நடிகைகள் பூனம் பஜ்வா, தீப்டி சடி மற்றும் மாதுரி பிரக்னன்சா ஆகியோர் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான வரலாற்று சரித்திர கதையம்சம் கொண்ட படம் “பத்தொண்பதாம் நூத்தாண்டு”.

இந்த படமானது கேரளாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரட்டுபுழா வேலாயுத பனிக்கர் என்ற தற்காப்பு கலை ஆசான், மற்றும் சமூக சீர் திருத்த வாதி பற்றிய கதை. இந்த படத்தின் நாயகன் சிஜு வில்சன் அரட்டுபுழா வேலாயுத பனிக்கராக நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை பூனம் பஜ்வா திருவாங்கூர் ராணியாக, மத்ருபில்லி கல்யாணகுட்டி அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகை மாதுரி பிரக்னன்சா, வயது 32, பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல், கதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையானது 19ஆம் நூற்றாண்டில், அதாவது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், 1800களின் கதையம்சம் கொண்ட படம் என்பதால் கேரள பாரம்பரிய உடையிலே நடிகைகள் தோன்றி நடித்துள்ளனர். இதே மாதிரி உடையணிந்தே நடிகை மாதுரியும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், காட்டுபகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை மாதுரி பிரக்னன்சா இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் நடிகை மாதுரி ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் வேஷ்டி கட்டி செம்ம கிளாமராக காட்சியளிக்கிறார்.