நடிகர் சூர்யா அவர்கள் தொடர்ந்து Ott தளத்தில் தான் தன்னுடைய படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இவ்வாறே வெளியாகியுள்ளது. நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் அவர்கள்தான் இந்த ஜெய்பீம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். எஸ். ஆர். கதிர் அவர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் பழங்குடியினரின் உரிமையைப் பற்றிப் பேசும் படமாக அமைந்துள்ளது. இவ்வாறு பழங்குடியினர் பற்றி இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் அனைத்துமே காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியினர் பற்றியதாகவே இருந்தது. ஆனால் முதன் முதலில் சமவெளியில் வாழக்கூடிய பழங்குடியினர் பற்றிய முதல் திரைப்படம் இந்த ஜெய் பீம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மற்றும் போலீஸ் பழங்குடியின மக்கள் மீது ஆதாரம் இல்லாமல் பொய் வழக்குப் போடுவது என்பது வழக்கம்தான். அப்படி ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த கதை உண்மையில் பழங்குடியின சமூகத்தில் நடந்த உண்மை சம்பவமாகும். இந்தப் படத்தில் ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ்.

இதில் மணிகண்டனின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைபடத்தில் ஜிவி பிரகாஷ் அவர்களின் சகோதரியாகவும், நடிகர் சித்தார்த் அவர்களின் மனைவியாகவும் நடித்து மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்திருந்தார்.
இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவரா ஜெய் பீம் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக அவரின் தோற்றமும், நடிப்பும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் சில மாதங்களுக்கு முன்புதான் தனது திருமணத்தை ரகசியமாக செய்து முடித்துள்ளார்.

நடிகை லிஜோமோல் ஜோஸ் கேரளாவை சேர்ந்த ஆண்டனி என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரவலாகி கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து தேடித்தேடி இந்த நடிகை யார் என்று கண்டுபிடித்து இணையத்தை தெரிக்கவிட்ட ரசிகர்கள் மத்தியில் இப்போது வெளியாகியுள்ள இவரது திருமண புகைப்படம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.