திறமையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டால், ஹிந்தி சினிமா வரை ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். பின்னர் படிப்படியாக சினிமாவில் முன்னேறியவர். வெள்ளை நிறமாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்ற கோட்பாட்டை மாற்றியவர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, க/பெ ரணசிங்கம் முதலிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பிற்கு சிறந்த உதாரணங்கள்.

தமிழ் சினிமாவில் இவர், நீதானே அவன் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்..பின்னர் கட்டப்பாவ காணோம், ஹலோ நான் பேய் பேசுறேன், கனா,வட சென்னை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் வடசென்னை திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகளில் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் ஜோமோண்ட், சுவிசேஷங்கள், ஜானகி போன்ற மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார. ரம்பன்டு, கௌசல்யா, ஜெகதீஷ் கிருஷ்ணமூர்த்தி போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற இந்தி படத்திலும் கூட இவர் நடித்துள்ளார்.
ஒடிடி தளத்தில் கூட திட்டம் 2 பூமிகா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் கைவசம் தற்போது அதிகமான படங்கள் உள்ளன. பிரபுதேவாவுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் அர்ஜுன் உடன் ஒரு புதிய கிரைம் திரில்லர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. நடிகர் அர்ஜுன் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

ஆக்ஷன் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் அர்ஜுன் தற்போது தினேஷ் லக்ஷ்மணன் இயக்க உள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிக்க உள்ளார் இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசிரியராகவும், ஆக்சன் கிங் அர்ஜுன் துப்பறியும் நிபுணராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் ஐ விட புத்திசாலித்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கதையை எனக்கு தினேஷ் லக்ஷ்மணன் சொல்லியபோது மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை தரும் படமாக அமையும் என்று நடிகர் அர்ஜுன் இந்த படத்தைப்பற்றி கூறியுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் விரைவில் படத்தின் பெயர் முடிவு செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.