பிரம்மாண்ட இயக்குநர் அடுத்ததாக ராம் சரணை வைத்து புதியப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெரும் பொருள் செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் ஷங்கர் ரூ.23 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷங்கர் மற்றும் படக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர், கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு மந்தமான நிலையில் காணப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் ஷங்கர் தமிழ் அல்லாது பிற மொழியில் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் திரையரங்கு உரிமையை தவிர மற்ற அணைத்து உரிமைகளும் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.