Homeபொழுதுபோக்குஎடுத்தது மூனு படம்...அதுக்குள்ள சம்பளத்தை இவ்வளோ கேட்பிங்களா நெல்சன்.. முணுமுணுக்கும் தயாரிப்பாளர்கள்

எடுத்தது மூனு படம்…அதுக்குள்ள சம்பளத்தை இவ்வளோ கேட்பிங்களா நெல்சன்.. முணுமுணுக்கும் தயாரிப்பாளர்கள்

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு ‘கோலமாவு கோகிலா’ பிடித்து போனது.

dr

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது.

nelson

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் தற்போது மூன்றாவதாக விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.

beast movie still

‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெல்சன் அடுத்தப்படத்திலிருந்து தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சனின் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர்கள் பலர் யோசித்து வருவதாக தெரிகிறது.

nelson

20 படங்களுக்கு மேல் நடித்து வரும் சிவகார்த்திகேயனே, ‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்கு பின் தான் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்து உள்ளார். ஆனால் அவரை வைத்து படம் இயக்கிய நெல்சன் மூன்று படங்களை இயக்கியுள்ள நிலையில், சம்பளத்தை 30 கோடி ரூபாயாக உயர்த்திருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நெல்சன் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாகவும் சன் பிக்சர்ஸ் ஒதுக்கிய தொகையை தாண்டி தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்