Homeபொழுதுபோக்குஅந்த ஒரு வார்த்தைக்காகத்தான் தனுஷின் படத்தில் நடித்தேன்.. மனம் திறந்த டிடி

அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் தனுஷின் படத்தில் நடித்தேன்.. மனம் திறந்த டிடி

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

DD

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் டிடி தெரிவித்துள்ளார்.

DD

அதன்படி, ஒருமுறை நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தனுஷ் மாதிரி ஒருத்தர் எடுக்கும்பொழுது வேண்டாம் என்று எப்படி சொல்வது. அதனால் நானும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக் கொண்டேன்.

DD

மேலும் தனுஷ் என்னிடம் இந்தப் படத்தில் லேடிஸ்க்கு ஒரு மெசேஜ் சொல்லணும், அதை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். அவர் சொன்ன அந்த வார்த்தைக்காகத்தான் நான் அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன் என டிடி தெரிவித்துள்ளார். தற்போது டிடி ‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஸ்வா’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சற்று முன்