தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் தான் திவ்யதர்ஷினி அவர்கள். இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் தான் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பைப் படித்து முடித்தார். தற்போது அந்த கல்லூரியிலேயே எம்ஃபில் படிப்பையும் முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான இவர் டிடி என்றே அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

திவ்யதர்ஷினி அவர்கள் நீலகண்டன் ஸ்ரீலதா ஆகிய தமிழ் குடும்ப தம்பதியினருக்கு 17 பிப்ரவரி 1985 அன்று மகளாக பிறந்தார். இவருக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கிறார்கள். திவ்யதர்ஷினியின் அக்காவும் நிறைய திரைப்படங்களிலும் நிகழ்ச்சி தொகுப்புகளிலும் நடித்திருக்கிறார். இவரின் தம்பி விமான ஓட்டியாக பணிபுரிகிறார். இவரின் தந்தை டி டி யின் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் குடும்ப பொறுப்பினை ஏற்று டிடி அவர்கள் தொலைக்காட்சியில் பணிபுரிய ஆரம்பித்தார்.
அதன் பிறகு நீண்ட காலமாக இவருக்கு நண்பராக இருந்து வந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை 2014 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் பல்வேறு கருத்து மோதல்கள் காரணமாக 2017 ஆம் ஆண்டிலேயே இவர்களுக்கிடையில் விவாகரத்து நடைபெற்றத.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான திவ்யதர்ஷினியின் தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேர் ஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. டிடியின் துரு துரு பேச்சும் குறும்புத்தனமும் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவரும் வண்ணத்தில் இருந்தது. அது மட்டும் அல்லாமல் தொகுப்பாளினி டிடி ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு மிகவும் அழகாக மாறி இருந்தார்கள்.
விஜய் டிவியின் காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் தான் திவ்யதர்ஷினி. அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். இதுவே விஜய் டிவியின் திவ்யதர்ஷினி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் சினிமாவில் இவ்வாறு ஆடை அணிவதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதிலும் திவ்யதர்ஷினி நாசுக்காக அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்து வந்தார்.
அதேபோல் சமீபத்தில் திவ்யதர்ஷினி மாலத் தீவு பகுதிக்கு சென்று பல கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட செய்துள்ளார்.

தற்போது திவ்யதர்ஷினி தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் மீண்டும் டிடி கவர்ச்சியில் இறங்கி விட்டாரா என சமூக வலைதளங்களில் தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரசிகர்கள் தொடை அழகில் ரம்பாவையே தூக்கி சாப்பிட்டு விட்டாரே திவ்யதர்ஷினி என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.