தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மறுக்க முடியாத மறக்க முடியாத நகைச்சுவை நடிகரில் முக்கியமானவர் கவுண்டமணி. 70கால கட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை ரசிகர்களிடையை பெரும் வரவேற்பை பெற்றது. கவுண்டமணிக்கு சரியான நேரத்தில் நகைச்சுவை கலந்து பஞ்ச் பேசுவது கைவந்த கலை.

கவுண்டமணியின் காமெடி தலைமுறைகளை கடந்து இப்போது இருக்கும் குழந்தைகளும் இவரது காமெடிக்கு புன்னகைக்கின்றனர். 80,90 காலகட்டத்தில் நாயகனை போன்று கவுண்டமணிக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருந்தனர். ஒரு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களில் நடிக்கும் அளவுக்கு கவுண்டமணி கால்ஷீட் இருந்தது. இவர் நகைச்சுவை மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடித்து அசத்தினார்.

கவுண்டமணியின் காமெடிக்கு பக்கபலமாக இருந்தது செந்தில். கவுண்டமணி – செந்தில் கூட்டணி தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. இந்த கூட்டணியின் காமடி ரசிகர்களை சிரிக்க வைத்து வயிறை புண்ணாக்கி விடும். இது போன்று சத்யராஜ் – கவுண்டமணி கூட்டணியும் ரசிகர்களிடையே பிரபலமானது.

இப்படி தமிழ் சினிமாவில் காமெடி அரசனாக இருந்த கவுண்டமணி சில வருடங்களாக திரைத்துறையைவிட்டு விலகி உள்ளார். ’49ஓ’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கவுண்ட மணியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி கவுண்டமணி இதுவரை ரூ.50 கோடிக்கு சொத்து குவித்து வைத்திருப்பதாக தெரிகிறது.