சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு சமீபத்தில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு ராஜூ சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலனாது.

இந்நிலையில் ராஜூ நேர்காணல் ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூகவலைதளத்தில் குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜூ கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் 15 நாள்களுக்கு முன்பு பீஸ்ட் படப்பிடிப்புக்கு சென்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது விஜய் வந்து என்னிடம் படப்பிடிப்புக்கு புதுசா என கேட்டார். நான் ஆம் என்றேன். மேலும் நெல்சனுடன் பணியாற்றியுள்ளேன் என்றேன். விஜய் தனது படப்பிடிப்புக்கு வரும் புதிய நபரை எளிதில் கண்டுபிடித்து விடுவார்.

தொடர்ந்து நானும் விஜய்யும் சிறிது நேரம் உரையாடினோம். அப்போது விஜய் எனது கண்கள் அழகாக இருக்கிறது என்றார். மேலும் நான் சிறு வயதில் இருந்து விஜய்க்காக சேர்த்து வைத்த புத்தகம் ஒன்றை காண்பித்தேன். அதை எல்லாவற்றையும் பார்த்தார். அதன் பின் அதில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார் என ராஜூ கூறினார்.