நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.
நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 16) மாலை ஒளிப்பரப்பாகிறது.

பிக் பாஸ் சீசன் 5 வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வழங்கும் விழாவிற்கு பிக் பாஸ் சீசன் 4 வின்னர் ஆரியை அழைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn’t invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022
பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பை புதிய வெற்றியாளருக்கு முந்தைய வெற்றியாளர் வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சீசன் 5 டைட்டில் வின்னருக்கு வழங்க ஆரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து ஆரி தனது ட்விட்டரில், ” பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம். நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இம்முறை பிக் பாஸ் குழுவின் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ஆரியின் ரசிகர்கள் பிக் பாஸ் குழுவினர் மீது கோபத்தில் உள்ளனர்.