தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வெளியான படங்களில் ஒன்று ‘தளபதி’. ரஜினி – மம்மூட்டி என இரு மாப்பெரும் நடிகர்கள் நடித்த இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அரவிந்த் சாமி. இவரை முதல் படத்திலேயே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின் அரவிந்த் சாமி படங்களில் நாயகனாகவே நடிக்க ஆரம்பித்தார். ஆள் பார்பதற்க செம்ம அழகாக இருந்தால் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்ப ஆரம்பித்தனர். அன்றையை காலக்கட்ட பெண்களின் கனவு நாயகனாக அரவிந்த் சாமி இருந்தார். மாப்பிளை நல்ல அரவிந்த் சாமி மாதிரி இருக்கனும் என்று கூறும் அளவுக்கு பெண்களில் மனதில் அரவிந்த் சாமி நிலைத்து நின்றார்.
திரைப்பயணத்தின் தொடக்கத்தில் அரவிந்த் சாமிக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் போக போக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கி ஒரு கட்டத்தில் வாயப்பு எதும் கிடைக்காமல் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். இப்படி இருந்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி டிக்கெட் கொடுத்தவர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா.

அரவிந்த் சாமி மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லானக வந்து மீண்டும் ரசிகர் மனதை கொள்ளை கொண்டார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் அரவிந்த் சாமி ஆரம்ப கட்டத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருப்பதாக கூறியுள்ளார்.
சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பாசமலர்கள்’ என்னும் படத்தில் அரவிந்த் சாமி, ரேவதி, ரகுவரன் உள்ளிட்டோருடன் அஜித் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாக தெரிவித்தார்.மேலும் அஜித்துடன் இனி நடிப்பிற்களா என கேட்டதற்கு அரவிந்த் சாமி நல்ல கதைகளம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கூறினார்.