தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகிகேரக்டர்களிலல் நடிப்பதயே விருப்பமாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
அப்படி அவர் ஹீரோயினாக இல்லை என்றாலும் கதையின் திருப்பத்திற்கு காரணமாக முக்கிய கதாபாத்திரமாகவும் அல்லது மக்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும்என்பததில்தீர்மானமமான முடிவுடன் இருக்கிறார் ஐஸ்வர்யா.
இவர் நடித்த பல படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக இருக்கின்றன. கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையும் இவர் விடுவதில்லை. தனக்கு அதில் சவாலான கேரக்டர் இருந்தாலும் கூட அதனையும் அழகாக செய்து வருகிறார் ஐஸ்வர்யா.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் இவருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகி ரேஷ்மிகா மந்தனா. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த கதாபாத்திரம் இருப்பதால் இதனை நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறுநடிப்பற்க்ககு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்கும் பீம்ல நாயக் என்ற திரைப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்தப் பெண் கதாபாத்திரம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமலும், படத்தின் சில காட்சிகளில் மட்டுமே இந்த கதாபாத்திரம் இடம்பெறுவதாக இருப்பதால் தனக்கு தேடிவந்த இந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம் இவர் தெலுங்கில் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கப் போதில்லை என்றும் கதையின் நாயகியாக மட்டுமே நடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
இவ்வாறு பட சூட்டிங்கில் என்னதான் பிஸியாக இருந்தாலும் ஐஸ்வர்யா தன்னைத் தொடரும் ரசிகர்களைகுஷிப்படுத்ததில்இரருந்து தவறுவது கிடையாது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சட்டையைகழற்றியயும், சட்டையை மேல்நோக்கி முடிச்சுப் போட்டும் காற்றில் பறப்பது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட என்ன ஷேர் இது? ஒரிஜினல் நாட்டுக்கட்டை என, இவ்வாறு தங்களின் மனதில் தோன்றியவற்றை எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…