Homeபொழுதுபோக்குமாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் சம்பளம் இவ்வளவு உயர்வா. ஆச்சர்யத்தில் திரைத்துறை

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் சம்பளம் இவ்வளவு உயர்வா. ஆச்சர்யத்தில் திரைத்துறை

பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மகன்தான் வெங்கட் பிரபு. இவர் தனது கல்வி வாழ்க்கையை முடித்து பின்னணி பாடகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். வெங்கட்பிரபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தந்தையிடம் சினிமா நுணுக்கங்களை கற்று தன் இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தை நண்பர் சரண் தயாரிப்பில் வெளியிட்டார்.

venkat prabhu

இந்த படம் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த தேடலுக்கான விஜய் விருதும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, போன்ற படங்களை இயக்கி வந்தார். இவரின் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்கப்பட்டது. மற்ற இயக்குனர்களை காட்டிலும் இவர் சற்று வித்தியாசமான இயக்குனர். அவரின் கதையும் வித்தியாசமாகவே அமைந்திருக்கும். பெரும்பாலான ஹீரோக்கள் நல்லவராகவும் புத்திசாலியாகவும் பலசாலியாகவும் தான் காட்டப்படுவார்கள் ஆனால் இவரின் கதையில் தான் ஹீரோ காமெடியனாகவும் வில்லனாகவும் காட்டப்படுவார்கள்.

இது தமிழ் சினிமாவில் வித்தியாசமாக பார்க்கப்பட்டது. அதற்குமேல் ரசிகர்களால் இளைஞர்களால் நன்கு ஈர்க்கப்பட்டது. தற்போது அவர் சிறிது காலம் பிரேக் எடுத்திருந்த நிலையில் மாநாடு என்ற படம் இவரின் இயக்கத்தில் வெளிவந்தது. இது வித்தியாசமான ஒரு லூப் கதையை வைத்து சிம்புவையும் புதுமை தோற்றத்தில் மாற்றி காட்டப்பட்டது. இது தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் மாற்றியமைக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

venkat prabhu

மேலும் குட்டி ஸ்டோரி, லைவ் டெலிகாஸ்ட், பார்ட்டி, போன்ற படங்களையும் இவர் இயக்கி வருகிறார். இது அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அவரின் சம்பளம் மாநாடு படத்தில் தயாரிப்பளர்களிடம் 4 கோடி வாங்கியதாகவும் மாநாடு பட வெற்றியை வைத்து தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளரிடம் 15 கோடி கேட்டு இருப்பதாகவும். மேலும் தமிழ் தயாரிப்பாளர்களிடம் 7 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கும் வேலையில் தயாரிப்பாளர்களும் வெங்கட்பிரபுவின் மேல் உள்ள நம்பிக்கையில் அவரின் கோரிக்கையை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. காலங்கள் புதுமையாக மாற மாற மக்கள் ரசனைக்கேற்ப திரைப்படக் காட்சிகளையும் வெங்கட்பிரபு டிஃபரண்டாக குடுப்பார் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது

சற்று முன்