மாடல் அழகியாக இருந்து சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

அதன் பின் மனிஷா யாதவ், ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘பட்டையை கிளப்பணும் பாண்டியா’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஒரு குப்பை கதை’, ‘சென்னை – 28 இரண்டாம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களிடையை தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மனிஷா யாதவ்வின் சமூகவலைதளப்பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். மாடல் அழகியான மனிஷா யாதவ் அவ்வப்பொழுது தனது சமூகவலைதளப்பக்கத்தில், யாரும் எதிர்பாராத விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தி வருவார்.

தற்போதும் கூட மனிஷா யாதவ் அது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் தன் பக்கம் கட்டிப்போட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலில் சமந்தா வருவது போன்று இருப்பதாக சிலர் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.