நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ‘தர்மத்தின் தலைவன்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்திக் உள்ளி்ட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

1990களில் குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்புவுக்கு ஒரு படி மேலே போய் கோயில் கட்டி அவருக்கு சிலை வைத்து ரசிகர்கள் வணங்க ஆரம்பித்தனர்.

குஷ்பு நடிகையாக மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் குஷ்பு சினிமாவில் நடித்து வருகிறார்.

குஷ்பு தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். 1995ஆம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான ‘முறைமாமன்’ படத்தில் குஷ்பு நடித்தார். இப்படத்தை சுந்தர் சி இயக்கினார். அந்த நேரத்தில் குஷ்புக்கு – சுந்தர் சிக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பின் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குஷ்புவின் இரண்டாவது மகள் அனந்திகா தனது தந்தை சுந்தர் சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் அனந்திகா உடலை குறைத்து சேலை உடுத்தி பார்பதற்கு அப்படியே அச்சு அசலாக குட்டி குஷ்புவாக உள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.