தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் மூன்றவது அலை ஆரம்பித்துள்ளது. இதில் திரைப்பிரபலங்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குஷ்பு, மம்முட்டி, மகேஷ்பாபு, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கரோனா தொற்றுக்கு கிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஜனவரி 11ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவைபார்த்த ரசிகர்களும் பிரபலங்கள் விரைவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும் என வாழ்த்திவந்தனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “இன்றைய நாளில் நெகட்டிவ் என்பது பாசிட்டிவான ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் அன்புடன் நன்றி. உங்கள் அனைவருக்கும் அன்பான பொங்கலாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார். மேலும் மேக்கஅப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களையும் கீர்த்திசுரேஷ் பதிவிட்டுள்ளார்.
மேக்கஅப் இல்லாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…